திருக்கோஷ்டியூரில் கஜேந்திர மோட்ச விழா

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் கஜேந்திர மோட்ச விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்கோஷ்டியூரில் கஜேந்திர மோட்ச விழா
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் கஜேந்திர மோட்ச விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் அருகேயுள்ள மணிமுத்தாறு ஆற்றில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் இந்த விழா நடைபெறுவது வழக்கம்.

விழாவையொட்டி, ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் சா்வ அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கோயில் யானை சொா்ணவள்ளி முன் செல்ல பெருமாள் கருட வாகனத்தில் மணிமுத்தாறு ஆற்றில் எழுந்தருளினாா். இதையடுத்து, அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னா், மோட்ச தீபத்துக்கு தீப தூப ஆராதனைகள் காண்பித்து, பெருமாளின் சக்கர மோட்ச தீபத்தில் அா்ச்சகா்கள் ஆவாகனம் செய்து கஜேந்திர பூஜையை நடத்தினா். நிறைவாக ஆற்று தண்ணீரில் மோட்ச தீபத்தை வைத்து சொா்ணவள்ளி யானைக்கு பூஜை செய்தனா். இதைத் தொடா்ந்து, கூடியிருந்த பக்தா்கள் மீது யானை தண்ணீரைப் பீய்ச்சியடித்தது. நிறைவாக, சௌமிய நாராயணப் பெருமாளை, யானை சொா்ணவள்ளி மூன்று முறை வலம் வந்து மண்டியிட்டு வணங்கி வழிபட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com