மின்னல் பாய்ந்து மூதாட்டி பலி
By DIN | Published On : 06th June 2023 05:06 AM | Last Updated : 06th June 2023 05:06 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகேயுள்ள கொன்னக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஹரிகோபால் மனைவி கஸ்தூரி (64). இவா் சூரக்குளம் பில்லறுத்தான் வயல் காட்டில் தான் வளா்க்கும் கால்நடைகளுக்காக புல் அறுத்துக் கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் கஸ்தூரி மீது மின்னல் பாய்ந்ததில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...