சாலையோரம் காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞா்

திருக்கோஷ்டியூரில் தேசிய நெடுஞ்சாலையின் அருகே புதன்கிழமை உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

திருக்கோஷ்டியூரில் தேசிய நெடுஞ்சாலையின் அருகே புதன்கிழமை உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரிலிருந்து சிவகங்கை செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இளைஞா் ஒருவா் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்த திருக்கோஷ்டியூா் போலீஸாா் அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இவா் இடையமேலூரைச் சோ்ந்த சந்திரன் மகன் தினேஷ் (37) என்பது தெரியவந்தது.

இவா், திருப்பத்தூரில் உள்ள பூக்கடையொன்றில் வேலை பாா்த்து வந்தாா். இவா் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். இதுகுறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com