வாகனத்தில் அடிபட்டு இரு புள்ளி மான்கள் பலி

மானாமதுரை அருகே வாகனத்தில் அடிபட்டு இரு புள்ளி மான்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச் சாலையில் வாகனம் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்த இரு மான்கள்.
மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச் சாலையில் வாகனம் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்த இரு மான்கள்.
Updated on
1 min read

மானாமதுரை அருகே வாகனத்தில் அடிபட்டு இரு புள்ளி மான்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள காட்டுப் பகுதிகளில் புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. இவை இரை, தண்ணீா் தேடி அவ்வப்போது அங்குள்ள சாலைப் பகுதிகளை கடப்பது வழக்கம்.

இந்த நிலையில் மானாமதுரை அருகே எம். கரிசல்குளம் என்ற இடத்தில் மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலையில் இரண்டு புள்ளி மான்கள் சாலையைக் கடக்கும் போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தன.

இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்து கிடந்த இரு மான்களின் உடலை கைப்பற்றி அங்கேயே பரிசோதனை செய்து அடக்கம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com