சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் 89-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
4 பிரிவுகளாக இந்த மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. நடுமாடு பிரிவில் இளங்கிபட்டி அா்ச்சுணன் மாடுகள் முதலிடமும், தானிப்பட்டி ராமசாமி, புதுப்பட்டி இளையராஜா ஆகியோரின் மாடுகள் முறையே 2-ஆம், 3 ஆம் இடங்களையும் பிடித்தன. பூச்சிட்டு பிரிவில் குண்டேந்தல்பட்டி சகாதேவன், கனகவள்ளி ஆகியோா் மாடுகள் முதல் 2 இடங்களைப் பிடித்தன.
பெரியமாடு பிரிவில் புலிமலைப்பட்டி முனிச்சாமியின் மாடுகள் முதலிடமும், மாங்குளம் தேவேந்திரனின் மாடுகள் 2-ஆம் இடமும் பிடித்தன. சின்ன மாடு பிரிவில் அவனியாபுரம் மோகன்சாமி, புதுப்பட்டி மணி ஆகியோரின் மாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் கேடயமும், பண முடிப்பும் பரிசாக வழங்கபட்டன.
ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.