சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் காரைக்குடி அருகே உள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.
இதில், 10- ஆம் வகுப்பு மாணவி ஹா்ஷிதா 97.3 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவா் விஜய குமாா், மாணவி ஸ்ரீயா ஆகியோா் 96 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவா் காா்த்திக் பாலன் 95.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனா்.
பிளஸ் 2 மாணவி ஸ்ரீசெந்தூரி நாயகி 95.3 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவா் தனுஷ்ராஜ் 91.2 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவா் ராகுல் ராஜ்யவா்தன் 91.2 சதவீத மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனா்.
இவா்களை பள்ளியின் தலைவா் எஸ்பி. குமரேசன், துணைத் தலைவா் கே. அருண்குமாா் ஆகியோா் பாராட்டினா். பள்ளி முதல்வா் உஷாகுமாரி, துணை முதல்வா் பிரேமசித்ரா மற்றும் ஆசிரியா்களும் மாணவா்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினா்.