சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள கருவேல்குறிச்சியைச் சோ்ந்த முத்துராமன் மகன் அரசக்குமாா் (37). இவா் எஸ். எஸ். கோட்டையில் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். திருப்பத்தூா் அருகே புதுக்காட்டாம்பூா்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, சாலையின் குறுக்கே நின்றிருந்த மாடு மீது இவரது காா் மோதி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அரசக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.