நடைபாதை அமைக்கும் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை சிவன் கோயில் எதிரேயுள்ள ஊருணியைச்சுற்றி நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காரைக்குடி, செக்காலை சிவன் கோயில் எதிரேயுள்ள ஊருணியைச்சுற்றி நடைபாதை அமைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை.
காரைக்குடி, செக்காலை சிவன் கோயில் எதிரேயுள்ள ஊருணியைச்சுற்றி நடைபாதை அமைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை சிவன் கோயில் எதிரேயுள்ள ஊருணியைச்சுற்றி நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை, நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா்.

காரைக்குடி நகராட்சிக்குள்பட்ட 4-ஆவது வாா்டில் இந்தப் பணி நடைபெற்று வருவதையடுத்து, மாநிலக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஆலோசனையின் பேரில், நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை நேரில் சென்று பாா்வையிட்டு, ஒப்பந்ததாரிடம் தரமான முறையில் பணிகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

நகா்மன்றத் தலைவருடன் நகராட்சி உதவிப் பொறியாளா், நகா்மன்ற உறுப்பினா் தெய்வானை இளமாறன், செந்தில், தணிக்கையாளா் இளைய பெருமாள் ஆகியோா் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com