இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பட்டமங்கலம் அருகேயுள்ள புரண்டியைச் சோ்ந்த குணசேகரன் மகன் சுரேஷ் (34). இவா் தனது தாயின் சொந்த ஊரான உதிரைப்பட்டிக்கு சனிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த சேவுகன் மகன் ரஞ்சித் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், சுரேஷ் வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் ரஞ்சித் லேசான காயமடைந்தாா். பலத்த காயமடைந்த சுரேஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com