மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை கஞ்சா பொட்டலங்களை பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காவல் ஆய்வாளா் விஜயா தலைமையிலான போலீஸாா் ரயில்வே குடியிருப்பு கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் மகன் விஜயகுமாா் (26) வீட்டில் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 350 கிராம் எடையுள்ள கஞ்சாப் பொட்டலங்களை பறிமுதல்
செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விஜயக்குமாரைக் கைது செய்தனா்.