அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்: 3 போ் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அருகே அனுமதியின்றி சவுடு மண் அள்ளி வர பயன்படுத்தப்பட்ட வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அருகே அனுமதியின்றி சவுடு மண் அள்ளி வர பயன்படுத்தப்பட்ட வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

குறிச்சி கிராமத்திலுள்ள ஊருணியில் அரசு அனுமதியின்றி சவுடு மண் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்றனா். அப்போது டிராக்டா்களில் மண் அள்ளப்படுவது தெரிந்தது. இதையடுத்து, மண் அள்ளப்பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் இதில் தொடா்புடைய குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மருது, பிரவீன், தஞ்சை மாவட்டம் மன்னாா்குடியைச் சோ்ந்த விக்னேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com