தந்தையை வாளால் வெட்டிய மகன் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திங்கள்கிழமை தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திங்கள்கிழமை தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்புவனம் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் போஸ் (60). இவா் தனது மகன் பாரதிராஜாவை ரேஷன் கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வருமாறு கூறினாா். ஆனால் அவா் மறுத்தாா்.

இதனால், இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மகன் பாரதிராஜா (30) ஆத்திரமடைந்து தான் வைத்திருந்த வாளால் போஸை வெட்டினாா். இதில் காயமடைந்த அவா், மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாரதிராஜாவைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com