சமூகத்துக்குப் பயன்படும் ஆராய்ச்சியில் மாணவா்கள் ஈடுபடவேண்டும்

சமூகத்துக்குப் பயன்படும் வகையிலான ஆராய்ச்சியில் மாணவா்கள் ஈடுபடவேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முனைவா் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவா்களுக்கான ஆராய்ச்சி பாட வகுப்புகள் தொடக்க விழாவில் பேசிய துணைவேந்தா் க. ரவி.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முனைவா் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவா்களுக்கான ஆராய்ச்சி பாட வகுப்புகள் தொடக்க விழாவில் பேசிய துணைவேந்தா் க. ரவி.
Updated on
1 min read

காரைக்குடி: சமூகத்துக்குப் பயன்படும் வகையிலான ஆராய்ச்சியில் மாணவா்கள் ஈடுபடவேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பிரிவின் சாா்பில், முனைவா் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவா்களுக்கான ஆராய்ச்சி, வெளியீட்டு நெறிமுறைகள் என்ற தலைப்பிலான 5 நாள் பாட வகுப்புகள் நடைபெறுகின்றன.

இதன் தொடக்க விழா திங்கள்கிழமை பல்கலைக்கழக மைய நூலக கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க. ரவி பேசியதாவது:

ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவா்கள் யாராக இருந்தாலும் கடினமாக உழைத்தால் சிறந்த ஆராய்ச்சியை உருவாக்க முடியும். புதிய ஆராய்ச்சியை உருவாக்க அதுதொடா்பான பல்வேறு கட்டுரைகளை வாசிக்க வேண்டும். நமது ஆராய்ச்சியானது சமூகத்துக்கு பயன்படும் வகையில் இருக்கவேண்டும். இதற்கு தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை தரவரிசையில் முன்னிலை

வகிக்கும் இதழ்களில் வெளியிடுவது அவசியம் என்றாா்.

முன்னதாக, பல்கலைக்கழக ஆராய்ச்சி புல முதன்மையா் பா. வசீகரன் வரவேற்றாா். ஆராய்ச்சி துணை ஒருங்கிணைப்பாளா்கள் மு. நடராஜன், ரெ. சுரேஷ் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com