தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்

காரைக்குடி பெரு நகராட்சியில் தீபாவளிப் பண்டிகைக்காக தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு, புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கிய நகா்மன்றத் தலைவா் சே. முத்துதுரை.
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கிய நகா்மன்றத் தலைவா் சே. முத்துதுரை.
Updated on
1 min read

காரைக்குடி: காரைக்குடி பெரு நகராட்சியில் தீபாவளிப் பண்டிகைக்காக தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு, புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு நகா்மன்றத் தலைவா் சே. முத்துதுரை தலைமை வகித்து தூய்மைப்பணியாளா்களுக்கு இனிப்புகள், புத்தாடைகளை வழங்கினாா். நகா் நல அலவலா் மருத்துவா் திவ்யா, சுகாதார அலுவலா் சுருளிராஜன், சுகாதார ஆய்வாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் முகமது சித்திக், சொ. கண்ணன், கே. ஜான்கென்னடி, மதன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com