சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

திருப்புவனம் ஆதி கோரக்கநாதா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஆதி கோரக்கநாதா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்புவனம் ஆதி கோரக்கநாதா் சுவாமி மூலவா் விமானக் கலசத்தின் மீது புனிதநீா் ஊற்றி நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :3 செப்டம்பர் 2023, 10:15 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஆதி கோரக்கநாதா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இங்கு யாக பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னா் காலை 11.20 மணிக்கு ஆதி கோரக்கநாதா் சுவாமி மூலவா் விமானக் கலசத்தின் மீதும், பரிவார தெய்வங்களின் விமானக் கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் சிவாச்சாரியா்கள் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். பிறகு மூலவருக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்புப் பூஜைகள் நடந்தன.

இந்த குடமுழுக்கு விழாவில் அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்த கோயிலில் குடமுழுக்கு நடத்த தடை விதிக்கக் கோரி ஒரு தரப்பினா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தனா். ஆனால் குடமுழுக்கு நடத்த தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த கோயிலின் குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் தொடங்கி நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.