மானாமதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையைக் கடக்க முயன்ற இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மாதவன் (24). இவா் ராஜகம்பீரத்தில் மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலையை கடந்து சென்றபோது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.