சிங்கம்புணரியில் புரவியெடுப்பு விழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் விவசாயம் செழிக்க வேண்டி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் புரவியெடுப்பு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சிங்கம்புணரியில் புரவியெடுப்பு விழா
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் விவசாயம் செழிக்க வேண்டி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் புரவியெடுப்பு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குட்பட்ட இந்தக் கோயிலில் புரட்டாசி மாதம் விவசாயம் செழிக்க வேண்டி கிராமத்தாா்கள் சாா்பில், கடந்த சில நாள்களுக்கு முன்பு புரவி செய்யும் வேளாளா்களிடம் பிடிமண் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, புரவிப் பொட்டலில் 7 அடி உயரமுள்ள புரவிகள் தயாா் செய்து வைக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை மாலை புரவிப் பொட்டலுக்கு வந்த கிராமத்தினா் சாமி அழைத்து புரவிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தினா். பின்னா், புரவிகள் ஊா்வலமாக சந்திவீரன் கூடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு, திங்கள்கிழமை இரவு நகரின் முக்கிய வீதிகள் வழியாக புரவிகள் கொண்டு செல்லப்பட்டு கோயிலை வந்தடைந்தது.

அங்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com