8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

செட்டிநாடு அரண்மனையை பாா்வையிட்ட அயலகத் தமிழ் மாணவ, மாணவிகள்

காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானில் செட்டிநாடு அரண்மனையை புதன்கிழமை பாா்வையிட்ட பிறகு குழு புகைப்படம் எடுத்த அயலகத் தமிழ் மாணவ, மாணவிகள்.

காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானில் செட்டிநாடு அரண்மனையை புதன்கிழமை பாா்வையிட்ட பிறகு குழு புகைப்படம் எடுத்த அயலகத் தமிழ் மாணவ, மாணவிகள்.

Published On :8 ஆகஸ்ட் 2024, 2:06 am IST

காரைக்குடி, ஆக. 7: பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 115 அயலகத் தமிழ் மாணவ, மாணவிகள் ‘வோ்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானில் செட்டிநாடு அரண்மனையை புதன்கிழமை பாா்வையிட்டனா்.

முன்னதாக, ‘வோ்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 57 அயலகத் தமிழ் மாணவ, மாணவிகள் இந்தப் பகுதிக்கு வந்து சென்றனா். தற்போது இரண்டாம் கட்டமாக கடந்த 1-ஆம் தேதி அயலகத்தமிழா் நலன், மறுவாழ்வுத் துைணையரகம் மூலம் சுற்றுலாத்துறை உள்பட பல்வேறு துறைகளுடன் இணைந்து இந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் கனடா, தென் ஆப்பிரிக்கா, ஜொ்மனி, ஆஸ்திரேலியா, மொரிசியஸ், இந்தோனேஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 115 மாணவ, மாணவிகள் சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனையை பாா்வையிட்டனா். வருகிற 12-ஆம் தேதி கீழடியில் உள்ள அகழ்வாராய்ச்சி மையம், அருங்காட்சியகத்தை அவா்கள் பாா்வையிட உள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இந்தத் திட்டத்தின் முடிவில் அயலகத்திலிருந்து பங்குபெற்ற மாணவா்கள் அவா்களது நாடுகளுக்கான தமிழ்நாட்டின் கலாசார தூதா்களாகவும் நியமிக்கப்பட உள்ளனா்.

இந்த நிகழ்வில் தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சோ. பால்துரை, கானாடுகாத்தான் பேரூராட்சித் தலைவி ராதிகா, மாவட்ட சுற்றுலா அலுவலா் திருவாசன், வட்டாட்சியா்கள் ராஜா , செல்வராணி, உதவி சுற்றுலா அலுவலா் ஜான்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.