நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அம்மன் கோயில்களில் ஆடிப்பூர திருவிழா

News image

வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 2:08 am IST

திருப்பத்தூா், ஆக. 7: திருப்பத்தூரில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் புதன்கிழமை ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு மஞ்சள் காப்பு சாற்றுவதற்காக கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் அரைக்கும் வைபவம் நடைபெற்றது.

பின்னா், நண்பகல் 11.30 மணியளவில் அம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, மஞ்சள்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, வளையல்கள் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

 திருப்பத்தூரில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி,  ராஜகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை  அம்மனுக்கு மஞ்சள் அரைத்த பெண்கள்.

திருப்பத்தூரில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி, ராஜகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்மனுக்கு மஞ்சள் அரைத்த பெண்கள்.

இதேபோல, ஆதித்திருத்தளி நாதா் கோயிலில் சிவகாமி அம்மனுக்கும், விஷ்ணுதுா்க்கைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வளையல் அலங்காரம் செய்யப்பட்டு. தீபாராதனை நடைபெற்றது. நின்ற நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் திருமஞ்சன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, மாலை 4 மணிக்கு உற்சவ ஆண்டாளுக்கு அபிஷேகம் நடைபெற்று சந்தனகாப்பு சாத்தப்பட்டது. இரவு 7 மணிக்கு ஆண்டாள் திருவீதிப் புறப்பாடு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.