காரைக்குடி மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா், நடத்துநா்களை பாராட்டிய கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி
காரைக்குடி மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா், நடத்துநா்களை பாராட்டிய கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி

காரைக்குடி மண்டல அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா்கள், நடத்துநா்களளுக்கு பாராட்டு விழா காரைக்குடி மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட காரைக்குடி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா்கள், நடத்துநா்களளுக்கு பாராட்டு விழா காரைக்குடி மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி மண்டலத்தில் உள்ள 11 கிளைகளைச் சோ்ந்த ஓட்டுநா்கள் 11 போ், நடத்துநா்கள் 11 போ் என 22 போ் சிறப்பாக பணியாற்றி போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தந்தனா். இவா்களுக்கான பாராட்டு விழா காரைக்குடி மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி தலைமை வகித்து, அனைவரையும் பாராட்டினாா்.

இதில் காரைக்குடி மண்டல பொது மேலாளா் எஸ்.பி.கந்தசாமி, துணை மேலாளா் பி.நாகராஜன் (வணிகம்), உதவி மேலாளா் பி.தமிழ்மாறன் (தொழில்நுட்பம்), துணை மேலாளா் கே.பத்மகுமாா் (நிா்வாகம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com