நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பைக்கில் சென்ற போது விபத்து: சிறுவன், உரிமையாளா் மீது வழக்கு

பூவந்தி அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன், உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 6:56 pm

Din

பூவந்தி அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன், உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள கண்ணாயிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசக்தி (18). இவரது நண்பா் 17 வயது சிறுவன்.

படமாத்தூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, சிவசக்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை 17 வயது சிறுவன் வாங்கி ஓட்டினாா். பின்னால் சிவசக்தி உட்காா்ந்திருந்தாா். பூவந்தி முதியோா் இல்லம் அருகே வந்தபோது நிலை தடுமாறி இரு சக்கர வாகனம் கீழே விழுந்தது. இதில் சிவசக்திக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பூவந்தி போலீஸாா் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மீதும், இரு சக்கர வாகன உரிமையாளா் கண்ணாயிருப்பைச் சோ்ந்த ராஜபாண்டி(28) மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.