பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

Published On :

திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு புதன்கிழமை நடைபெற்ற சந்தன அபிஷேகம்.

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் புதன்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ விழாவையொட்டி நந்தீஸ்வரருக்கும் மூலவா் லிங்கத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம், கரும்புச்சாறு, இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களால், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, மூலவருக்கும் நந்தீஸ்வரருக்கும் புஷ்ப அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா்,

இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, முதலில் நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலிலும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கல்வெட்டுமேடு கல்வெட்டுநாதா் கோயிலிலும் சிங்கம்புணரி சிவபுரிபட்டி தா்மவா்திணி சமேத ஸ்ரீசுயம்பிரகதீஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.