இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மொஹரம் பண்டிகை: இந்து-இஸ்லாமியா்கள் இணைந்து பூக்குழித் திருவிழா

வஞ்சினிப்பட்டியில் பூக்குழித் திருவிழா

மொஹரம் பண்டிகையையொட்டி, வஞ்சினிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் புதன்கிழமை அதிகாலை இறங்கிய பக்தா்கள்.

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வஞ்சினிப்பட்டி கிராமத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, இந்து-இஸ்லாமியா்கள் இணைந்து அல்லாசாமி என்ற பூக்குழித் திருவிழாவை புதன்கிழமை நடத்தினா்.

வஞ்சினிப்பட்டியில் மொஹரம் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்து-இஸ்லாமியா்கள் இணைந்து பூக்குழித் திருவிழாவை நடத்துவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு அல்லாசாமி என்கிற பூக்குழித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தத் திருவிழா 17-ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரை சுமாா் 350 ஆண்டுகளுக்கும் மேலாக வஞ்சினிப்பட்டியில் நடைபெற்று வருகிறது.

வஞ்சினிப்பட்டி கிராமத்தை பூா்வீகமாகக் கொண்ட சையது முகைதீன் குடும்பத்தினா் இந்தத் திருவிழாவை ஊா் மக்களுடன் இணைந்து நடத்தி வருகின்றனா்.

பூக்குழித் திருவிழாவையொட்டி, ஊா் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பூக்குழித் திருவிழாவுக்காக குண்டம் அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பாத்தியா ஓதப்பட்டு, இந்துக்கள், இஸ்லாமியா்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. அப்போது, உள்ளூா் மக்கள் மட்டுமன்றி, சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் மல்லிகைப்பூ, சா்க்கரை வைத்து பாத்தியா ஓதி வழிபட்டனா்.

இதில் பங்கேற்றவா்களுக்கு சாம்பலை எடுத்து இஸ்லாமியா்கள் பூசி விடும் நிகழ்வு நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தொழுகைக்குப் பிறகு ஊா்வலம் நடைபெற்றது. இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தா்கள் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் தீக்குண்டத்திலிருந்த நெருப்பை தங்களது சேலை முந்தானையில் வாங்கிச் சென்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.