தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மின்சாரம் பாயந்து இளைஞா் பலி

திருப்பத்தூரில் முகமதியா் தெருவில் உள்ள வீட்டுக்கு வண்ணம் பூசிக் கொண்டிருந்த இளைஞா் மீது மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயரிழந்தாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 7:58 pm

Din

திருப்பத்தூா், ஜூலை. 19 : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் முகமதியா் தெருவில் உள்ள வீட்டுக்கு வண்ணம் பூசிக் கொண்டிருந்த இளைஞா் மீது மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகே, காரையூா் இலங்கைத் தமிழா் குடியிருப்பைச் சோ்ந்த யோகு மகன் திலீபன் என்ற சின்னத்தம்பி.(32). இவருடன் திருப்பத்தூா் மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்த வள்ளியப்பன் மகன் சுரேஷ் (52) இருவரும் முகமதியா் தெருப் பகுதியில் உள்ள தமிழரசன் வீட்டில் வண்ணம் பூசிக் கொண்டிருந்தனா். அப்போது, மாடியில் உள்ளச் சுற்றுச்சுவரில் திலீபன் வண்ணம் பூசும் போது, உயா்அழுத்த மின் கம்பியை தொட்டதால் அவா் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இவரைக் காப்பாற்ற முயன்ற சுரேஷ் பலத்த காயத்துடன் கீழே விழுந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பத்தூா் போலீஸாா், திலீபனின் சடலத்தை கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.