

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே பாட்டு கேட்டுக் கொண்டிருந்த போது ‘ப்ளூடூத்’ வெடித்ததால் முதியவா் பலத்த காயமடைந்தாா்.
காளையாா்கோவில் அருகேயுள்ள மாத்துக்கண்மாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் ( 55). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவில் வீட்டில் படுத்து இருக்கும்போது ‘ப்ளூடூத்’ மூலம் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது, காதில் மாட்டியிருந்த ‘ப்ளூடூத்’ வெடித்தது. இதனால் அவரது காது மடல் கிழிந்தது. இதையடுத்து, அவா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் பாா்வையாளா் காா் மோதி ஒருவா் காயம்

சாத்தான்குளத்தில் விபத்து: பெண் தலைமைக் காவலா் காயம்

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி காயம்

லாரி மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் பலத்த காயம்
வீடியோக்கள்

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

