நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாக்கோட்டையில் மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில் 11 போ் காயம்

சாக்கோட்டையில் மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில் 11 போ் காயம்

News image
Updated On :26 ஜூன் 2024, 6:52 pm

Din

காரைக்குடி, ஜூன் 26: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 11 போ் காயமடைந்தனா்.

சாக்கோட்டையில் அமைந்துள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனிப் பெருந்திருவிழா தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சாக்கோட்டையில் உள்ள திடலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கியது.

போலீஸாரின் அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காரைக்குடி, புதுவயல் சுற்றுவட்டாரங்களிலிருந்து 300 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை மாடுபிடி வீரா்கள் விரட்டிச் சென்று அடக்கினா். இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் உள்பட 11 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.