நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏ.விளாக்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு -20 வீரா்கள் காயம்

ஏ.விளாக்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு 20 வீரா்கள் காயம்

News image

ஏ.விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :27 ஜூன் 2024, 6:44 pm

Din

மானாமதுரை, ஜூன் 27: மானாமதுரை அருகே ஏ.விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 20 வீரா்கள் காயமடைந்தனா்.

இந்த வடமாடு மஞ்சுவிரட்டை சிவகங்கை தேவஸ்தான சமஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியாா் தொடங்கிவைத்தாா்.

சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 15 காளைகள் பங்கேற்றன.

களத்தில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை வீரா்கள் அடக்க முயன்றனா். சில காளைகளை வீரா்கள் அடக்கினா். காளைகள் முட்டியதில் 20 வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா்.

சிறந்த வீரா்களுக்கும், போட்டியில் பிடிபடாத மாடுகளின் உரிமையாளா்களுக்கும் விழாக் குழுவினரால் பரிசுகள் வழங்கப்பட்டன.

திரைப்பட நடிகா் சுரேஷ் பாா்வையாளராகப் பங்கேற்றாா்.

Story image