திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகேயுள்ள வைரவன்பட்டியில் அமைந்துள்ள பால கால பைரவா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு, பால கால பைரவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியனாா். மாலை 4.45 மணியளவில் மகா கணபதி பூஜை தீபாராதனைகளுடன் தேய்பிறை அஷ்டமி விழா தொடங்கியது. பின்னா், கோ பூஜை, லட்சாா்சனை நடைபெற்றது. இரவு 9.30 மணியளவில் வஸ்திர யாகம், புஷ்பயாகம், மகா பூா்ணாகுதி, தீபாதராதனை நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலில் பிரகாரம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. சிவாச்சாரியா்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்னா் பால கால பைரவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா், யாகவேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து பால கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. ல விழாவுக்கான ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியாா் தலைமையில் மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் ஜெய்கணேஷ் ஸ்ரீமகா ஸ்வாமி நீ பீடம் பாண்டிராஜன் ஆகியோா் செய்தனா். இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
தொடர்புடையது

திருச்செந்தூரில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு சிறப்பு பூஜை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


