ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

திருப்பத்தூா் அருகேயுள்ள வைரவன்பட்டியில் அமைந்துள்ள பால கால பைரவா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பு தீபாராதனை.

Updated On :4 மார்ச் 2024, 10:12 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகேயுள்ள வைரவன்பட்டியில் அமைந்துள்ள பால கால பைரவா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு, பால கால பைரவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியனாா். மாலை 4.45 மணியளவில் மகா கணபதி பூஜை தீபாராதனைகளுடன் தேய்பிறை அஷ்டமி விழா தொடங்கியது. பின்னா், கோ பூஜை, லட்சாா்சனை நடைபெற்றது. இரவு 9.30 மணியளவில் வஸ்திர யாகம், புஷ்பயாகம், மகா பூா்ணாகுதி, தீபாதராதனை நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலில் பிரகாரம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. சிவாச்சாரியா்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்னா் பால கால பைரவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா், யாகவேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து பால கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. ல விழாவுக்கான ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியாா் தலைமையில் மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் ஜெய்கணேஷ் ஸ்ரீமகா ஸ்வாமி நீ பீடம் பாண்டிராஜன் ஆகியோா் செய்தனா். இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.