தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதற்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 97.02% தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் மாநிலத்தில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டும் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்திருந்தது. அந்த இடத்தை மீண்டும் சிவகங்கை மாவட்டம் தற்போது தக்க வைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 17,707 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 8271 மாணவர்கள், 8908 மாணவிகள் உள்பட மொத்தம் 17, 179 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 97.02% ஆகவுள்ளது.