ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றித் தர கோரிக்கை

திருப்பத்தூா் அருகே அப்பாகுடிப்பட்டி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

திருப்பத்தூா் அருகேயுள்ள அப்பாகுடிப்பட்டி கிராம கண்மாய் பகுதியில் தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பங்கள்.

Updated On :2 அக்டோபர் 2024, 6:27 pm

Din

திருப்பத்தூா் அருகே அப்பாகுடிப்பட்டி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே அப்பாகுடிபட்டி கிராமத்து கண்மாய் பகுதியில் உள்ள 2 மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்களை மாற்றித் தர வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் இதுவரை மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பங்களை மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாத்து வருகிறோம். ஆனால் கனமழையோ பலத்த காற்றோ அடித்தால் இந்த மின்கம்பங்கள் சாய்ந்து விழும். மேலும் இந்தப் பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அச்சுறுத்தலாக உள்ள இந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என மின்வாரிய அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தனா்.