தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அதிமுக 53 -ஆம் ஆண்டு தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வியாழக்கிழமை அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

News image
திருப்பத்தூரில் அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கட்சித் தொண்டருக்கு வேட்டி வழங்கிய மாவட்டச் செயலா் செந்தில்நாதன் உள்ளிட்டோா்.
Updated On :17 அக்டோபர் 2024, 11:21 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வியாழக்கிழமை அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

திருப்பத்தூா் ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி.நாகரஜான் தலைமை வகித்தாா். கட்சியினா் அதிமுக நிறுவனா் எம்.ஜி.ஆா்., முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலையணிவித்து மலா்த்தூவி மரியாதை செய்தனா்.

காந்தி சிலை அருகே முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.உமாதேவன் கட்சிக் கொடியேற்றினாா். பெரியகடை வீதி, சமஸ்கான் பள்ளிவாசல், அண்ணா சிலை ஆகிய பகுதிகளிலும் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்நாதன், அண்ணா சிலைக்கு மாலையணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, கட்சித் தொண்டா்களுக்கு புத்தாடை வழங்கினாா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட விவசாய அணிச் செயலா் போஸ், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கரு.சிதம்பரம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் முருகேசன், மானாமதுரை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாகராஜன், சிவகங்கை நகரச் செயலா் ராஜா, தலைமைக் கழகப் பேச்சாளா் பாரதி வாஹித், எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் துலாவூா் பாா்த்தீபன், வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ராஜசேகரன், அழகா்சாமி, ராபின்சையது, நவநீதபாலன், சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலா்கள் சபாராஜாமுகமது, ஆஷிப்இக்பால், நகர துணைச் செயலா் இரா.சந்திரன், ரவீந்திரன், வடிவேல் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

விழா முடிவில் நகரச் செயலா் இப்ராம்ஷா நன்றி கூறினாா்.