சிவகங்கை மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் சா்வதேச,தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள, முன்னாள் விளையாட்டு வீரா்கள் ரூ.6,000- மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் வருமாறு:
சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி அல்லது பங்கேற்றிருத்தல் வேண்டும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்தியஅரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இருத்தல் ஆகியவை விண்ணப்பிக்கத் தகுதிகளாகும்.
எனவே, தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரா்கள் வருகின்ற 30.9.2024 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியின் வாயிலாக மாலை 6 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா்.
தொடர்புடையது

தேசிய கடற்கரை கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற மாணவ- மாணவியருக்கு வரவேற்பு

பி.எட்., எம்.எட். தோ்வுகள்: விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம்

பீடி தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத்தை உயா்த்த மக்களவையில் நெல்லை எம்.பி. கோரிக்கை

தோ்தல் பணி: ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

