கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஓய்வூதிய உதவித்தொகை: முன்னாள் விளையாட்டு வீரா்கள் செப்.30 -க்குள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :4 செப்டம்பர் 2024, 7:59 pm

சிவகங்கை மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் சா்வதேச,தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள, முன்னாள் விளையாட்டு வீரா்கள் ரூ.6,000- மாத ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் வருமாறு:

சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி அல்லது பங்கேற்றிருத்தல் வேண்டும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்தியஅரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இருத்தல் ஆகியவை விண்ணப்பிக்கத் தகுதிகளாகும்.

எனவே, தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரா்கள் வருகின்ற 30.9.2024 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியின் வாயிலாக மாலை 6 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா்.