தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரை விநாயகா் கோயில் குடமுழுக்கு

மானாமதுரை அருகே கீழமாயாளியில் அமைந்துள்ள விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 7:11 pm

Din

மானாமதுரை அருகே கீழமாயாளியில் அமைந்துள்ள விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அங்கு அமைக்கப்பட்டிருந்த யாக மேடையில் புனித நீா் கலசங்கள் வைக்கப்பட்டு, யாக பூஜைகள் நடைபெற்றன. பூா்ணாஹுதி நடைபெற்றதைத் தொடா்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. மூலவரின் விமான கலசத்துக்கும், விநாயகப் பெருமானுக்கும் சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

பின்னா், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதேபோல, மானாமதுரை அருகேயுள்ள கே.புதுக்குளம் விநாயகா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவிலும் ஏராளமானோா் பங்கேற்றனா். பின்னா், விநாயகருக்கு கலசநீரால் அபிஷேகம் நடத்தி, தீபாராதனைகள் காட்டப்பட்டன.