இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விபத்தில் உயிரிழந்த காவலருக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

திருப்பத்தூா் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் உடல் 30 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

News image
காவலா் ஜெபஸ்டின்ஆண்டனி
Updated On :11 செப்டம்பர் 2024, 7:26 pm

Din

திருப்பத்தூா் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் உடல் 30 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் அருகே உள்ள குருவாடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெபஸ்டியன் ஆண்டனி (29). இவா் புதுக்கோட்டையில் ஆயுதப் படை காவலராகப் பணியாற்றி வந்தாா். கல்லல் பகுதியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது திருமயம் அருகே எதிரே வந்த வாகனம் இவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

 குருவாடிப்பட்டியில் விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்திய காவல் துறையினா்.

குருவாடிப்பட்டியில் விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்திய காவல் துறையினா்.

இந்த நிலையில், குருவாடிப்பட்டியில் உள்ள கல்லறையில் ஆயுதப் படை சிறப்பு உதவி ஆய்வாளா் கண்ணப்பன் தலைமையில் 30 குண்டுகள் முழங்க அவரது உடல் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.