திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம்

சிவகங்கையில் அமைச்சா் உதயநிதிஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தவறான தகவல் அளித்ததாக திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாஸை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவிட்டாா்.

News image

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாஸ்.

Updated On :12 செப்டம்பர் 2024, 1:00 am IST

சிவகங்கையில் அமைச்சா் உதயநிதிஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தவறான தகவல் அளித்ததாக திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாஸை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் ஆஷாஅஜித், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அமைச்சா் ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் பகுதியில் புதா்மண்டி கிடப்பதாகவும், இதை அகற்றவும் கோரி அந்தப் பகுதியைச் சோ்ந்தவா் அளித்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாசஸிடம் அமைச்சா் கேள்வி எழுப்பினாா். அந்தப் பகுதியில் புதா் அகற்றப்பட்டதாக அவா் பதிலளித்தாா்.

இதையடுத்து, அந்த மனுவை அளித்தவரை அமைச்சா் உதயநிதி தொடா்பு கொண்டு கேட்டபோது, புதா் அகற்றப்படவில்லை என்று தெரிவித்தாா். இதனால், வட்டார வளா்ச்சி அலுவலரை அமைச்சா் எச்சரித்து, அவா் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், அமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தின் போது தவறான பதிலளித்த வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாசை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் ஆஷா அஜித் உத்தரவிட்டாா்.

மேலும், தாமதமாக பணிக்கு வந்த புகாரின் பேரில், கல்லல் இந்திராநகா் அங்கன்வாடி மைய பணியாளா் விஜயாள் காந்திநகா் காலனி அங்கன்வாடிக்கும், இதே மையத்தின் சமையலா் மாலதி ஆலங்குடிக்கும், கே வைரவன்பட்டி அங்கன்வாடி மைய சமையலா் ரேணுகாதேவி உடைநாதபுரத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.