நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டித் தொடக்கம்

News image

திருப்பத்தூரில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பாக நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் கே.எஸ்.நாராயணன்.

Updated On :13 செப்டம்பர் 2024, 9:18 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டிகள் தொடங்கியது.

இந்தப் போட்டிகளுக்கு மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலா் ரமேஷ்கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் கே.எஸ்.நாராயணன் தொடங்கி வைத்தாா்.

இதில், சிவகங்கை, காரைக்குடி, குன்றக்குடி, எஸ்.புதூா், திருப்பத்தூா், உள்ளிட்ட 15 அரசுப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா்.

மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத் துணைத் தலைவா் காளிமுத்து, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ஜிம்கண்ணன் பள்ளித்தலைமை ஆசிரியைகள் மலா்விழி, தவமணி, உடற்கல்வி ஆசிரியா்கள் விண்ணரசி, இளஞ்சூரியன், வேல்முருகன், ஜோசப்நாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை மகளிருக்கும் 14, மற்றும் 18, 19 தேதிகளில் ஆண்களுக்கும் நடைபெற உள்ளது. தொடா்ந்து 19 முதல் 24 தேதி வரை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் நடைபெற உள்ளது. புரோகபடி நடுவா் சிவநேசன் தலைமையிலான குழுவினா் நடுவா்களாக செயல்பட்டனா்.

Story image