தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தாத உணவகங்கள், சிறு வணிகா்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி, உணவுப் பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத நெகிழி ஆகியவற்றை பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருள்களை மட்டும் பயன்படுத்தும் மிகச் சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ. 1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ. 50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள உணவு வணிகா்கள், மாவட்ட ஆட்சியரின் அலுவலக இரண்டாம் தளத்தில் செயல்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை!

எம்.பி. ஆ.ராசா வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள்

புதுக்கோட்டையில் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

