காரைக்குடியில் நாளை மின் தடை

Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (டிச. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்குடி 110/22 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, செக்காலைக்கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், செஞ்சை, கோவிலூா் சாலை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வருகிற 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com