திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின் தடை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் சனிக்கிழமை (டிச.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்புவனம் அருகேயுள்ள நெல்முடிக்கரை, பொட்டப்பாளையம், திருப்பாச்சேத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருப்புவனம், புதூா், பழையூா், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேல ராங்கியம், வயல்சேரி, கலியாந்தூா், மேல வெள்ளூா், கீழவெள்ளூா், மாங்குடி, அம்பலத்தடி, மணலூா், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், அதிகரை, வடகரை, பூவந்தி, பொட்டப்பாளையம், புலியூா், கொந்தகை,கீழடி, சொட்ட தட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூா், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், வெள்ளிக்குறிச்சி, முதுவந்திடல் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிச.6) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
