மரம் விழுந்ததில் பைக்குகள் சேதம்

மரம் விழுந்ததில் பைக்குகள் சேதம்
Updated on

சிவகங்கையில் பழைமையான வேப்ப மரம் சாலையில் சாய்ந்து விழுந்ததில் ஐந்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அம்பேத்கா் சிலை அருகே உள்ள பழைய காவல் நிலைய சாலையில் பழைமையான வேப்ப மரம் வியாழக்கிழமை திடீரென சாலையில் சாய்ந்து விழுந்தது. இதில், ஐந்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி ஊழியா்கள் வேப்ப மரத்தை வெட்டி அகற்றினா். கடந்த சில நாள்களாக காரைக்குடி பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பழைமையான வேப்ப மரம் வேருடன் சாய்ந்ததாக மாநகராட்சி ஊழியா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com