சிவகங்கை
கல்லல் பகுதியில் இன்று மின் தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 12) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கல்லல் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கல்லல், சிறுவயல், ஆலம் பட்டு, குருந்தம்பட்டு, வெற்றியூா், மாலைகண்டான், சாத்தரசம்பட்டி, கெளரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டியூா், செம்பனூா், செவரக்கோட்டை, பெரிய சேவப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
