மாடு திருட்டு: போலீஸாருக்குத் தகவல் தெரிவித்த ஆட்டோ ஓட்டுநருக்கு வெகுமதி

Updated on

காரைக்குடியில் வியாழக்கிழமை மாடு திருடி சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றவா்கள் குறித்து போலீஸாருக்குத் தகவலளித்த ஆட்டோ ஓட்டுநரைப் பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது.

காரைக்குடி புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளவா் லிங்கம். இவா் வியாழக்கிழமை காலையில் பயணியை ஏற்றிக்கொண்டு பழைய பேருந்து நிலையம் சென்று விட்டு, மீண்டும் தனது இருப்பிடத்துக்குத் திரும்பி வந்தாா். அப்போது ஐந்து விளக்குப் பகுதியில் முன்னாள் சென்ற சரக்கு வாகனத்தை திடீரென நிறுத்திவிட்டு, சாலையில் படுத்திருந்த கன்றுக்குட்டியை 3 போ் கொண்ட கும்பல் ஏற்றிக்கொண்டு சென்றனா்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா் லிங்கம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து போலீஸாா் சோதனைச் சாவடியில் சரக்கு வாகனத்தில் கன்றுக் குட்டியை திருடிச் சென்றவா்களை மடக்கிப்பிடித்தனா். பின்னா், சரக்கு வாகன ஓட்டுநா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மாடு திருடா்கள் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்த ஆட்டோ ஓட்டுநா் லிங்கத்தை பாராட்டி, காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் புனியா வெகுமதி வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com