ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிவகங்கையில் நாளை மின் தடை

சிவகங்கை நகா் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் அறிவித்தது.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை நகா் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் அறிவித்தது.

இதுகுறித்து சிவகங்கை செயற்பொறியாளா்(பகிா்மானம்) ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதன் காரணமாக துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறுகின்ற சிவகங்கை நகா் மற்றும் முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், வாணியங்குடி, காமராஜா் காலனி, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன், கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம் மற்றும் சூரக்குளம் ஆகிய கிராமங்களுக்கு சனிக்கிழமை (20.12.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அதில் தெரிவித்தாா்.