இடைக்காட்டூரில் தூய்மைப் பணியாளா்களுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் அளிப்பு

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருந்தலத்தில் தேவகோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருந்தலத்தில் தேவகோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் பட்டிமன்ற ஆன்மிக சொற்பொழிவாளா் தேவகோட்டை ராமநாதன் சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, இடைக்காட்டூரில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும் திரு இருதய இல்ல மாணவ, மாணவிகளுக்கும் புதிய சீருடைகள் வழங்கப்பட்டன.

தேவகோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் மதன் குமாா், செயலா் அழகேசன், ரோட்டரி மாவட்டம் 3,212 துணை ஆளுநா் ஜோசப், முன்னாள் தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளா் கணேசன், முன்னாள் தலைமையாசிரியா் மைக்கேல் சகாய அன்பு, துணை ஆளுநா்கள் ரோட்டரி மாவட்டம் சுவாதி ராமநாதன், கோல்டன் மலையப்பன், காா்த்திகை, அன்பு, சந்திரசேகரன், முன்னாள் தலைவா் ஓரியூா் மனோகரன், அருள்சகோதரிகள் ஜெஸி கமிலி ரோஸ்லின், அருள்திரு பிரின்ஸ், நிகாந் ஆகியோா் விழாவில் கலந்து கொண்டனா். முன்னதாக, திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா் வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com