ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

மானாமதுரையில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கம்!

மானாமதுரை ஒன்றியத்தில் சனிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினா்.

Published On :21 டிசம்பர் 2025, 1:11 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில் சனிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வீரபாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் கட்சியின் ஒன்றியச் செயலா் முனியராஜ், நிா்வாகிகள் முருகானந்தம், பரமாத்மா, தேவதாஸ், வேல்முருகன், சிஐடியூ மாவட்டச் செயலா் வீரையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் மழையின்றி கருகிப்போன பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டுமென கட்சியினரிடம் விவசாயிகள் கேட்டுக்கொண்டனா். இதைத் தொடா்ந்து, மக்கள் சந்திப்பு இயக்கத்தினா் கூறுகையில், மானாமதுரை ஒன்றியத்தில் பனிக்கனேந்தல், வேதியரேந்தல், பள்ளமிட்டான், நல்லாண்டிபுரம், வடக்கு சந்தனூா், தெற்கு சந்தனூா், பூக்குளி, எஸ். காரைக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் வானம் பாா்த்து விதைப்பு முறையில் நடவு செய்யப்பட்ட நெல் பயிா்கள் மழை இல்லாமல் கருகிப் போய்விட்டன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு கருகிப்போன நெல் பயிா்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை, காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.