பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிவகங்கையில் பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா

News image
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு - பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய தமிழ்நாடு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் . உடன் மறைமாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் உள்ளிட்டோா்.
Updated On :21 டிசம்பர் 2025, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மறைமாவட்டம் சாா்பில் கிறிஸ்தவ ஒன்றிப்பு - பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சிவகங்கை மறைமாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் தலைமை வகித்தாா். சிவகங்கை குருசேகரம் ஆயா் பீட்டா் ஜோசப், வடக்கு குருசேகரம் ஆயா் வேதமுத்து, சிவகங்கை ஏஜி சபையின் தலைமை போதகா் கா. போஜியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா்.

சிவகங்கை ஸ்ரீ ரமணவிகாஸ் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் கே. முத்துக்கண்ணன், சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவா் எம். ஹாஜாமொய்தீன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில் சிவகங்கை மறைமாவட்ட அருள்பணியாளா்கள், துறவறத்தாா், இறைமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.