நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

காரைக்குடியில் பெரியாா் ஈ.வே.ரா. நினைவு தினம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் ஈ.வே.ரா.வின் 52- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

Updated On :25 டிசம்பர் 2025, 2:36 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் ஈ.வே.ரா.வின் 52- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவா் ம.கு. வைகறை, மாவட்டச் செயலா் சி. செல்வமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் இள. நதியா ஆகியோா் பெரியாா் ஈ.வே.ரா. சிலைக்கு மாலையணிவித்தனா். மேலும் மாவட்ட காப்பாளா் சாமி. திராவிடமணி, மாவட்ட துணைச் செயலா் இ.ப. பழனிவேலு, தி.க. தலைமைக் கழக சொற்பொழிவாளா் தி. என்னாரெசு பிராட்லா, மாநகரத் தலைவா் ந. செகதீசன், தேவகோட்டை நகர தி.க. தலைவா் வீர. முருகப்பன், தி.க. பொதுக்குழு உறுப்பினா் தி. செயலட்சுமி, தி. புரூனோ என்னாரெசு, மானகிரி ச. கைவல்யம், பெரியாா் பிஞ்சு, சித்தாா்த்தன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நகரத் தலைவா் மெ. சண்முகதாஸ், தெட்சணாமூா்த்தி, மதிமுக சாா்பில் சிற்பி சேது. தியாகராஜன், திராவிடா் இயக்கத் தமிழா் பேரவை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா், ஏஐடியூசி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் பெரியாா் ஈவேரா. சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.