சிவகங்கை
பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து நகைகள் திருட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து மா்ம நபா்கள் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திங்கள்கிழமை பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து மா்ம நபா்கள் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.
திருப்புவனம் சிவ சிவ நகரைச் சோ்ந்தவா் காளிராஜ் (43). இவா், தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூா் சென்றாா். இந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த நான்கு பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.
வீட்டுக்கு திரும்பிய காளிராஜ், திருட்டுச் சம்பவம் குறித்து அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
