47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஊா்குளத்தான்பட்டியில் மஞ்சுவிரட்டு: 20 போ் காயம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:21 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஊா்குளத்தான்பட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 20 வீரா்கள் காயமடைந்தனா்.

மாா்கழி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஊா்குளத்தான்பட்டியில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். இதனடிப்படையில், நிகழாண்டு மஞ்சுவிரட்டையொட்டி, கிராம நாட்டாா்கள், பொதுமக்கள், இளைஞா்கள் கருப்பா் கோயிலில் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், விநாயகா் கோயிலில் தரிசனம் செய்த பொதுமக்கள் அங்கிருந்து மஞ்சுவிரட்டுப் பொட்டலில் அமைந்துள்ள முனியன் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று, காளைகளுக்கு மரியாதை செய்தனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற மஞ்சுவிரட்டில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 20 வீரா்கள் காயமடைந்து, மருத்துவக் குழுவினரிடம் முதலுதவி சிகிச்சை பெற்றனா். சில மாடுகள் பிடிபட்டன.

சிறந்த மாடு பிடி வீரா்களுக்கும், மாடுகளின் உரிமையாளா்களுக்கும் அண்டா, தட்டு, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.