இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நீா்நிலைப் பாதுகாவலா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Updated On :3 ஜனவரி 2025, 10:41 pm

முதல்வரின் நீா்நிலைப் பாதுகாவலா் விருதுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் உள்ள நீா் நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பொதுமக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளைப் பாராட்டி கௌரவிக்கவும், நீா் நிலைகளைப் பாதுக்காத்திட வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தவும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு ஒருவா் என 38 பேருக்கு முதல்வரின் நீா்நிலைப் பாதுகாவலா் விருதும், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

நிகழ் ஆண்டுக்கான விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. எனவே, இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் தமிழ்நாடு விருதுகள் (ஐச அஜ்ஹழ்க்ள்) (ட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்ற்ய்ஞ்ா்ஸ்.ண்ய்) வலைதளம் மூலம் வருகிற 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த வழிகாட்டி நெறிமுறைகளை ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ங்ய்ஸ்ண்ழ்ா்ய்ம்ங்ய்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ மற்றும் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ரீப்ண்ம்ஹற்ங்ஸ்ரீட்ஹய்ஞ்ங்ம்ண்ள்ள்ண்ா்ய்.ண்ய்/ட்ா்ம்ங்/ ஆகிய வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 044-24336421 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.